25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >>


சேதமடைந்த ராஜபாளையம் புதுக்குளம் கண்மாய் விவசாயிகள், விளைபொருட்களை கொண்டு  செல்லும் பாதை. 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சேதமடைந்த ராஜபாளையம் புதுக்குளம் கண்மாய் விவசாயிகள், விளைபொருட்களை கொண்டு  செல்லும் பாதை. 

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் அய்யனார்கோயில் ஆற்றின் நீர்வரத்து பெறும் முதல் கண்மாயாக முடங்கியாறு ரோட்டின் அருகே புதுக்குளம் கண்மாய் அமைந்துள்ளது.சுமார் 200 ஏக்கர் பாசன வசதி உள்ள இக்கண்மாய் நிறைந்து பிரண்டை குளம், புளியங்குளம், கொண்டநேரி  உள்ளிட்ட நகரை ஓட்டிய கண்மாய்களும் தொடர்ச்சியாக நீர்வரத்து பெற்று வருகின்றன.

இந்நிலையில் கண்மாய் கரை வழியாக இரண்டு கிலோமீட்டர்தூரம் உள்ள விளை நிலங்களுக்கு செல்லும் பாதை முறையாக வசதி செய்யப்பட வில்லை. கரடு முரடாகவும் உரம், விளை பொருட்கள், இடுபொருட்கள் கொண்டு செல்ல டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்லவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அகலம் குறைவாக

உள்ளதால் ,மழைக்காலங்களில் சகதியில் சிக்கி விவசாயிகள் சிரமத்திற்கு உள் ளாகின்றனர்.இதுவரை பாதையை சீரமைத்து தரவில்லை. விவசாயிகள் தேவை கருதி தார் சாலை அமைத்து தர விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News