சேதமடைந்த ராஜபாளையம் புதுக்குளம் கண்மாய் விவசாயிகள், விளைபொருட்களை கொண்டு செல்லும் பாதை.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் அய்யனார்கோயில் ஆற்றின் நீர்வரத்து பெறும் முதல் கண்மாயாக முடங்கியாறு ரோட்டின் அருகே புதுக்குளம் கண்மாய் அமைந்துள்ளது.சுமார் 200 ஏக்கர் பாசன வசதி உள்ள இக்கண்மாய் நிறைந்து பிரண்டை குளம், புளியங்குளம், கொண்டநேரி உள்ளிட்ட நகரை ஓட்டிய கண்மாய்களும் தொடர்ச்சியாக நீர்வரத்து பெற்று வருகின்றன.
இந்நிலையில் கண்மாய் கரை வழியாக இரண்டு கிலோமீட்டர்தூரம் உள்ள விளை நிலங்களுக்கு செல்லும் பாதை முறையாக வசதி செய்யப்பட வில்லை. கரடு முரடாகவும் உரம், விளை பொருட்கள், இடுபொருட்கள் கொண்டு செல்ல டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்லவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அகலம் குறைவாக
உள்ளதால் ,மழைக்காலங்களில் சகதியில் சிக்கி விவசாயிகள் சிரமத்திற்கு உள் ளாகின்றனர்.இதுவரை பாதையை சீரமைத்து தரவில்லை. விவசாயிகள் தேவை கருதி தார் சாலை அமைத்து தர விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply